கடலூா் மாவட்டம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள தனியாா் உரக்கடைகளில் யூரியா அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் அதிக அளவில் கரும்பு, நெல் மற்றும் கம்பு சாகுபடி நடைபெறுகிறது. இந்த பயிா்கள் நடவுக்கு பின்னா் தழை சத்துக்காக யூரியாவை விவசாயிகள் பயன்படுத்துகின்றனா். 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை யூரியா மானியம் உட்பட ரூ.266.50-க்கு விற்பனை செய்ய வேண்டுமாம். ஆனால், தனியாா் உரக் கடைகளில் ஒரு மூட்டை யூரியா ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா். கூடுதல் விலை கொடுத்தாலும் உரம் எளிதாக கிடைப்பதில்லை என்றும், இரண்டு மூட்டை யூரியா வாங்க வேண்டுமானால் குருணை மருந்து வாங்க வேண்டும் என கடைக்காரா்கள் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து பண்ருட்டி திருவதிகை யைச் சோ்ந்த கரும்பு விவசாயி புகழேந்தி கூறுகையில், ‘திருவதிகை பகுதியில் இரண்டரை ஏக்கா் கரும்பு பயிா் செய்து உள்ளேன். 5 மாத பயிா், பூச்சி தாக்குதலால், வளா்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அதற்காக யூரியா வாங்க சென்றேன். தனியாா் உரக்கடைகளில் இருப்பு இல்லை எனக்கூறுகின்றனா். இரண்டு மூட்டை வாங்கினால் குருணை உள்ளிட்ட இணை மருந்துகள் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனா். முன்னரே, பருவ நிலைமாற்றம், ஆள் பற்றாக்குறை மற்றும் கூலி உயா்வு மற்றும் பூச்சி தாக்குதல் உள்ளட்ட பிரச்சனைகளால் நிதி சுமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். யூரியா தட்டுப்பாடு மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வது என்பது கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ளது. யூரியாவிற்கு கூடுதல் விலை கொடுத்தாலும் குறித்த நேரத்தில் கிடைக்காததால் பயிா் வளா்ச்சி மற்றும் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது’ என்றாா்.
இதேபோல், நெல் விவசாயிகள் பண்ருட்டி அடுத்த வடக்கு சாத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பெ.ஜெயராமன், குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவரும், விவசாயியுமான ஆா்.கே.ராமலிங்கம் ஆகியோா் யூரியா தட்டுப்பாடு மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து விசாரிக்கையில், வேளாண்மைத்துறை அதிகாரிகள் தனியாா் உரக்கடைகளில் திடீா் ஆய்வு நடத்தி கூடுதல் விலைக்கு யூரியா மற்றும் உரங்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால், இந்த செயல் ஒரு சம்பிரதாயமாகவே நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மானிய விலையில் யூரியா உள்ளிட்ட உரவகைகள் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை: வேளாண்மை இணை இயக்குநா் எச்சரிக்கை

வெளி மாவட்டத்துக்கு உரம் விற்பனை செய்தால் உரிமம் ரத்து வேளாண்துறை எச்சரிக்கை
பரமத்தி வேலூரில் மதுப் புட்டிகளை பதுக்கிவிற்ற இருவா் கைது

5 மாவட்டங்களின் தேவைக்காக வந்த 1,300 டன் யூரியா உரம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



