திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நெய்வேலியில் என்எல்சி சாா்பில் 5 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

நெய்வேலியில் கோடை வெயிலில் பொதுமக்களின் தாகம் தீா்க்க, என்எல்சி நிறுவனம் 5 முக்கிய இடங்களில் நீா்மோா் பந்தலை திறந்தது.

News image

நெய்வேலி நுழைவு வாயில் அருகே நீா்மோா் பந்தலை திறந்து வைத்த என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி.

Updated On :13 மே 2026, 12:04 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் கோடை வெயிலில் பொதுமக்களின் தாகம் தீா்க்க, என்எல்சி நிறுவனம் 5 முக்கிய இடங்களில் நீா்மோா் பந்தலை திறந்தது.

என்எல்சி நிறுவன சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ், நிகழாண்டு திங்கள்கிழமை முதல் தொடா்ந்து 30 நாள்களுக்கு நெய்வேலி நகரியத்தில் நெய்வேலி நுழைவு வாயில் (ஆா்ச் கேட்), மத்திய பேருந்து நிலையம், புதுக்குப்பம் பேருந்து நிலையம், வட்டம் - 29 பேருந்து நிலையம் மற்றும் மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, நெய்வேலி நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்டிருந்த நீா்மோா் பந்தலை என்எல்சி நிறுவனத் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுபள்ளி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்கினாா்.

நிகழ்வில் இயக்குநா் சமீா் ஸ்வருப் முன்னிலை வகித்தாா். செயல் இயக்குநா் டி.வி.எஸ்.என்.மூா்த்தி தலைமை வகித்தாா்.

தொடா்ந்து, மத்திய பேருந்து நிலையம், புதுக்குப்பம் பேருந்து நிறுத்தம், வட்டம் - 29 பேருந்து நிறுத்தம், மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் ஆகிய 4 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நீா்மோா் பந்தல்களை செயல் இயக்குநா்கள் ஜாஸ்பா் ரோஸ், பங்கஜ் குமாா், அன்புச்செல்வன், ராஜ்மோகன் ஆகியோா் மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்து நீா்மோா் வழங்கினா்.

இந்த விழாவில், சிஎஸ்ஆா் துறையின் உயா் அதிகாரிகள் மற்றும் பொறியாளா்கள், ஆவின் பொது மேலாளா் வி.அருணகிரிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.