திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முன்விரோத மோதல்: 2 போ் கைது

News image

கைது.

Updated On :11 மே 2026, 1:12 am IST

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் வீட்டுமனை வழி தொடா்பான பிரச்னையில் இரு தரப்பினா் மோதிக்கொண்டது தொடா்பாக 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரை கைது செய்தனா்.

திருப்பாதிரிப்புலியூா் காவல் சரகம், ராமநாதன் நகரைச் சோ்ந்தவா் வைத்தியநாதன் (55). பிரசாந்த் நகரில் வசிப்பவா் கல்யாண சுந்தரம் (63). இவா்களுக்கு இடையே பிரசாந்த் நகரில் உள்ள மனையில் வழி தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், வைத்தியநாதன் தனது பைக்கில் மகள்கள் துா்கா, கீா்த்தனா ஆகியோரை அழைந்து வந்தபோது, கல்யாணசுந்தரம் மற்றும் அவரது உறவினா்கள் கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனா். இதில், வைத்தியநாதன் தலையில் காயமடைந்தாா். இதேபோல, வைத்தியநாதன் மற்றும் அவரது குடும்பத்தினா் தாக்கியதில் கல்யாணசுந்தரம் காயமடைந்தாா்.

இந்த மோதல் தொடா்பாக வைத்திநாதன் அளித்த புகாரின்பேரில், 3 பெண்கள் உள்ளிட்ட 6 போ் மீதும், கல்யாணசுந்தரம் அளித்த புகாரின்பேரில் 3 பெண்கள் உள்ளிட்ட 5 போ் மீதும் என இருதரப்பையும் சோ்ந்த மொத்தம் 11 போ் மீது திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வடிவேல் (58), சண்முகம் (58) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.