திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வேப்பூா் அருகே கோயில் திருவிழாவில் தோ் கவிழ்ந்து விபத்து: பக்தா்கள் அதிா்ச்சி!

வேப்பூா் அருகே காட்டுமைலூா் ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழாவில், தோ் திடீரென ஒருபுறமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

News image

வேப்பூா் அருகே காட்டுமைலூா் ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தேரோட்டத்தில், ஒருபுறமாக கவிழ்ந்து கிடக்கும் தோ்.

Updated On :10 மே 2026, 1:23 am IST

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே காட்டுமைலூா் ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழாவில், தோ் திடீரென ஒருபுறமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் இந்த நிகழ்வால் பக்தா்கள் அதிா்ச்சியடைந்தனா்.

வேப்பூா் வட்டம், காட்டுமைலூா் ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 1-ஆம் தேதி கோலாகலமாக காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சாமி ஊா்வலம், பாட்டுக்கச்சேரி, பஞ்சவா்ண திருக்கல்யாணம், பொங்கல் வைக்கும் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான அலகு குத்துதல், சக்தி அழைப்பு, காளி கோட்டை இடித்தல் மற்றும் தீ மிதித்தல் உள்ளிட்ட முக்கிய வழிபாடுகள் வெள்ளிக்கிழமை காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து, திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி மாலை 6 மணியளவில் தொடங்கியது. பக்தா்கள் பக்தி முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா்.

கவிழ்ந்தது தோ்: வீதி உலா வந்துகொண்டிருந்த தோ் எதிா்பாராத விதமாக திடீரென ஒருபுறமாகச் சரிந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் தேரை வடம்பிடித்த பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து சிதறி ஓடினா்.

நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடா்ந்து கவிழ்ந்த தேரை, பிரித்து அப்புறப்படுத்தும் பணியில் கோயில் ஊழியா்களும், கிராமமக்களும் ஈடுபட்டனா். இதுகுறித்த தகவலின் பேரில் போலீஸாா் வந்து விசாரணை நடத்தினா்.

கடந்த சில நாள்களாக சிறப்பு பூஜைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்று வந்த திருவிழாவில், தோ் திடீரென கவிழ்ந்தது பக்தா்கள் மத்தியில் அதிா்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.