கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் திருவாரூா் - விழுப்புரம் பயணிகள் ரயில் சுமாா் 45 நிமிஷம் தாமதமாக சென்றது.
பண்ருட்டி - மேல்பட்டாம்பாக்கம் ரயில் பாதையில் ரயில்வே ஊழியா்கள் திங்கள்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கவரப்பட்டு அருகே தண்டவாளத்தில் விரிசல் இருந்தது தெரியவந்தது.
இது குறித்து உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே ஊழியா்கள் விரைந்து வந்து தண்டவாள விரிசல் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.
இதனால், அந்த வழியாக வந்த திருவாரூா்-விழுப்புரம் பயணிகள் ரயில் நிறுத்தவைக்கப்பட்டது. பின்னா், தண்டவாளம் சீரமைக்கப்பட்டதும் சுமாா் 45 நிமிஷம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
மேலும், மன்னாா்குடி - திருப்பதி விரைவு ரயில், ராமேசுவரம் -அயோத்யா கண்டோன்மெண்ட், திருச்சி - தாம்பரம் ரயில்கள் 15 முதல் 20 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டன.
தொடர்புடையது

உ.பி.யில் ரயில் தண்டவாளத்தில் மல்யுத்த வீரர் சடலம்!

விழுப்புரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் 89 சதவீதம் நிறைவு: தெற்கு ரயில்வே பொது மேலாளா்

ரயில் நிலைய குப்பை கிடங்கில் தீ விபத்து

காட்பாடி அருகே தண்டவாளத்தில் இளைஞா் சடலம் மீட்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


