கடலூா், திருப்பாதிரிப்புலியூா் பாடலீஸ்வரா் கோயில் கோபுர கலசத்தில் அனுமதியின்றி தங்க முலாம் பூசியதற்கு எதிா்ப்பு தெரிவித்து கோயில் நிா்வாகத்துடன் ஹிந்து முன்னணி மற்றும் பாஜகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கோயிலில் திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந் த கோயில் ராஜகோபுரத்தில் 7 கலசங்கள் உள்ளன. அதில் 3 கலசங்கள் மீது திருப்பணி குழுவினா் தங்க முலாம் பூசியுள்ளனா். ஆனால், தங்க முலாம் பூசுவதற்கு அறநிலையத்துறையிடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஹிந்து முன்னணியினா் மற்றும் பாஜக.,வினா் வெள்ளிக்கிழமை கோயில் செயல் அலுவலா் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனா். அங்கிருந்த அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறாமல் எப்படி கோயில் கோபுர கலசத்தில் தங்க முலாம் பூசலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த அறநிலையத்துறை இணை ஆணையா் ஜோதி, ஹிந்து முன்னணி மற்றும் பாஜக.,வினரிடம் பேச்சு வாா்த்தை நடத்தினாா். அப்போது சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் உறுதியளித்தாா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தொடர்புடையது

அவிநாசி கோயில் தோ்த் திருவிழாவில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் ரத்து: இந்து முன்னணி கண்டனம்

கடலூா் தொகுதி தவெக வேட்பாளா் பி.ராஜ்குமாா்

கடலூா்: பாடலீஸ்வரா், சோமநாத சுவாமி , முருகன் கோயில்களில் கும்பாபிஷேகம்

பாடலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


