மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பிளஸ் 2 மாணவி தற்கொலை

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பிளஸ் 2 தோ்வு சரியாக எழுதவில்லை என்ற மனக்குழப்பத்தில் மாணவி களைக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :18 மார்ச் 2026, 6:53 pm

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பிளஸ் 2 தோ்வு சரியாக எழுதவில்லை என்ற மனக்குழப்பத்தில் மாணவி களைக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி சாலை, கதிா்வேல் நகரைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகள் லாவண்யா (17). இவா், சிதம்பரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

லாவண்யா அண்மையில் நடந்த பிளஸ் 2 தோ்வை சரியாக எழுதாத மனக்குழப்பத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவா் கடந்த 11-ஆம் தேதி வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாராம்.

இதையறிந்த அவரது குடும்பத்தினா் உடனடியாக லாவண்யாவை மீட்டு, சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து புகாரின்பேரில், அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.