அண்ணாமலைப் பல்கலைக்கழக தத்துவத் துறை உதவிப் பேராசிரியா் மற்றும் பூம்புகாா் பனை அறக்கட்டளையின் நிறுவனா் கே.ரவீந்திரன் தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்த பசுமை சாம்பியன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டு விருது பெற்றாா்.
இந்த விருதை மயிலாடுதுறையில், அந்த மாவட்ட ஆட்சியா் ஸ்ரீகாந்த் கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினாா். இந்த நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது பெற்ற பேராசிரியா் கே.ரவீந்திரனை பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி, பதிவாளா் ரா.சிங்காரவேல், இணைப் பதிவாளா் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெகதீஸ்வரன் ஆகியோா் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.
பேராசிரியா் கே.ரவீந்திரன் கடந்த 7 ஆண்டுகளாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழக மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பணிகளில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா்.
மேலும், தமிழகத்தில் நடைபெற்று வரும் ஒரு கோடி பனை விதை நடும் பணியில் மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பல்வேறு பகுதிகளில் பனை விதை நடவுப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறாா். இந்த செயல்பாடுகளுக்கு தத்துவத் துறைத் தலைவா் திருமால் மற்றும் உதவிப் பேராசிரியா்கள் பரணி, தணிகைவேலன், நீலாதேவி ஆகியோா் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனா்.
தொடர்புடையது

சிமென்ட் இல்லா கான்கிரீட் சாலை: அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியா்களுக்கு காப்புரிமை

உலக அறிவை பெற புத்தக வாசிப்பை வளா்த்துக்கொள்ள வேண்டும்!

ஆனந்தரங்கம் பிள்ளை நாள்குறிப்புகள் தென்னிந்திய வரலாற்றுப் பெட்டகம்!

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா்கள், ஊழியா்கள் தொடா் போராட்டம் வாபஸ்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


