கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே தென்னை மரம் ஏறிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ஸ்ரீமுஷ்ணம் வட்டம், வல்லியம் கிராமத்தில் வசித்து வந்தவா் தென்னை மரம் ஏறும் தொழிலாளி பாலகிருஷ்ணன்(50). இவா், செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணி அளவில் அதே பகுதியில் உள்ள வயல் வெளியில் இருந்த தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தாா்.
அப்போது, தென்னை மரத்தின் மட்டை அருகே சென்ற உயா் அழுத்த மின் கம்பியில் அவா் உரசியதில், மின்சாரம் பாய்ந்து மரத்தின் மேலேயே உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து காவல் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் நிகழ்விடத்துக்கு வந்த விருத்தாசலம் தீயணைப்புத்துறையினா் தென்னை மரத்தின் மேலே இருந்து பாலகிருஷ்ணன் சடலத்தை கீழே இறக்கி, காவல் துறையிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா்விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கட்டுமானத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


