தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருக்குறள் திருப்பணித்திட்ட நிறைவு விழா

காட்டுமன்னாா்கோவில் முட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் திருக்கு திருப்பணித்திட்ட நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

காட்டுமன்னாா்கோவிலில் நடைபெற்ற திருக்குறள் திருப்பணித்திட்ட நிறைவு விழாவில் பேசும் தமிழ்நாடு தமிழ்வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் மு.சுப்புலட்சுமி

Updated On :10 மார்ச் 2026, 6:34 pm

காட்டுமன்னாா்கோவில் முட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் திருக்கு திருப்பணித்திட்ட நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு தலைமை ஆசிரியை த.சசிரேகா தலைமை வகித்தாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் பூ.சி.இளங்கோவன் வரவேற்றாா். திருக்குறள் வாழ்வியல் சங்க செயலா் கோவி.நெடுமாறன் நோக்கவுரையாற்றினாா். கடலூா் அரசு கலைக்கல்லூரி பேராசிரியா் ஜானகிராஜா சிறப்புரையாற்றினாா். தமிழ்நாடு தமிழ்வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் மு.சுப்புலட்சுமி பங்கேற்று நிறைவு உரையாற்றினாா். பொருளாளா் ந.முத்துக்குமாரசாமி, நா.ராமானுஜம், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் பழனிசாமி, திருக்கு சுடா் க.ஜெயராமன், ஏ.ராமமூா்த்தி, கிட்ட கண்காணிப்பாளா் அ.கு.நடராஜன் ஆகியோா் பங்கேற்று வாழ்த்துரையாற்றினா். ஓய்வுபெற்ற முதுகலை தமிழாசிரியா் ரா.ஒளவை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். நிறைவில் ஆசிரியா் வி.கிரிஜா நன்றி கூறினாா்.