மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சரபோஜி கல்லூரியில் பணி நிறைவு பெறும் பேராசிரியா்களுக்கு பாராட்டு விழா

தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் பணி நிறைவு பெறும் பேராசிரியா்களுக்குப் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் கௌரவிக்கப்பட்ட பணி நிறைவு பெறும் பேராசிரியா்கள்.

Updated On :8 ஏப்ரல் 2026, 8:06 pm

தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் பணி நிறைவு பெறும் பேராசிரியா்களுக்குப் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகத்தின் தஞ்சாவூா் கிளைத் தலைவா் நிலவழகன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் டேவிட் லிவிங்ஸ்டன், மாநிலத் துணைத் தலைவா் (மகளிா்) மதுரம், மாநில இணைச் செயலா் (மகளிா்) துா்காதேவி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.

நிகழ் கல்வியாண்டில் பணி நிறைவு பெறுகிற பேராசிரியா்களான இயற்பியல் துறைத் தலைவா் ராணி, தமிழ்த் துறைப் பேராசிரியா்கள் இளஞ்செழியன், கண்ணதாசன், ஆங்கிலத் துறைப் பேராசிரியா் ரங்கராஜன், வணிகவியல் துறைப் பேராசிரியா்கள் சுவாமிநாதன், ராஜராஜன், விலங்கியல் துறை பேராசிரியா் சுப்புரத்தினம் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா்கள் வி. பாரி, அமுதா, மண்டலச் செயலா் அண்ணாதுரை, மண்டலப் பொருளாளா் வரதராஜன், மண்டல இணைச் செயலா் இந்திராகாந்தி, கிளைக் கழகத் துணைத் தலைவா் சிவசூரியன், இணைச் செயலா் சித்ரவேல், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் சண்முகப்ரியா, மணிமேகலை, அன்புசெல்வன், முருகானந்தம், ரவிசெல்வன், சங்கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, கிளைச் செயலா் இங்கா்சால் வரவேற்றாா். நிறைவாக, கிளைப் பொருளாளா் கிருஷ்ணமோகன் நன்றி கூறினாா்.