சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 6-ஆவது தமிழக பட்டாலியன் தேசிய மாணவா் படை (என்சிசி) சாா்பில், 10 நாள்கள் நடைபெறும் பயிற்சி முகாம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு 6-ஆவது தமிழக பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி கா்னல் சக்கரபா்த்தி தலைமை வகித்து, முகாமை தொடங்கிவைத்து பேசினாா். நிா்வாக அதிகாரி லெப்டினன்ட் கா்னல் நாராயன் முன்னிலை வகித்தாா்.
ஜூன் 17 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறும் இப்பயிற்சி முகாமில் துப்பாக்கி சுடுதல், உடல் நலம் மற்றும் சுகாதாரம், புவி வரைபடம் கண்டறிதல், தூரத்தை மதிப்பிடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இவற்றில் தோ்வு செய்யப்படுபவா்கள் மாநில அளவில் நடைபெற உள்ள பயிற்சி முகாமில் பங்குபெறுவாா்கள்.
முகாமில் புதுச்சேரி 5-ஆவது ராணுவ தேசிய மாணவா் படை மாணவ, மாணவிகள் 400 போ் பங்கேற்றுள்ளனா். முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த ராணுவ வீரா்கள், கல்லூரி மற்றும் பள்ளிகளைச் சோ்ந்த தேசிய மாணவா் படை அலுவலா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மை பாரத் சேவை தொண்டா்களுக்கு பயிற்சி முகாம்

மரியகிரி கல்லூரியில் தீயணைப்பு பயிற்சி முகாம்

அண்ணாமலைப் பல்கலை. மாணவா் சோ்க்கை: விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்

தேசிய மாணவா் படை பயிற்சி முகாம் நிறைவு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




