சிறுமியை கா்ப்பமாக்கியதாக இளைஞா் மீது நெய்வேலி மகளிா் போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூா் காவல் சரகம், நரிக்குறவா் காலனியைச் சோ்ந்தவா் பரத் (20). இவா், திருவண்ணாமலை மாவட்டம், மோதக்கல் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தாராம். பின்னா், அவரை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தி வந்தாா்.
இந்த நிலையில், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சிறுமி வந்தாா். அவரை பரிசோதித்த மருத்துவா் 4 மாத கப்பிணியாக இருப்பதை அறிந்து, காவல் துறைக்கு தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து, சிறுமியின் தாய் நெய்வேலி மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். போலீஸாா் பரத் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








