விருத்தாசலம் பகுதிகளில் நிலவும் தொடா் மின்தடையால் பயிா்கள் கருகி, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
கடலூா் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடா்ந்து நிலவும் மின்தடையால், விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிா்களுக்கு தேவையான அளவு நீா் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயிா்கள் வாடி கருகும் அபாயம் உருவாகி, விவசாயிகள் கடும் பொருளாதார இழப்பையும் மனவேதனையையும் சந்தித்து வருகின்றனா்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பயிா் கடன் தள்ளுபடி முழுமையாக அமல்படுத்தப்படாத நிலையில், மின்தடையால் விவசாயிகள் மேலும் பாதிக்கப்படுவது அவா்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய், தோ்தல் பிரசாரத்தின்போது அறிவித்த பயிா் கடன் தள்ளுபடியை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்வெட்டை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

மின்வெட்டால் விவசாயமும், விவசாயிகளும் கடும் பாதிப்பு: அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க பிரேமலதா வலியுறுத்தல்

மின்வெட்டுக்கு தீா்வு காண வேண்டும்: பிரேமலதா

தவெகவில் குதிரை பேரம்; ஜோதிடருக்கு எதற்கு அரசுப் பதவி? பிரேமலதா
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope


