கடலூா் மாநகராட்சியில் சாலை, குடிநீா், மின் விளக்கு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துவதுடன், மக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையா் கிஷன்குமாா் தெரிவித்தாா்.
கடலூா் மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய முஜிபுா் ரகுமான் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, சிதம்பரம் துணை ஆட்சியராக பணியாற்றிய கிஷன்குமாா் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டாா்.
இந்த நிலையில், கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கிஷன்குமாா் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உறுப்பினா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
கடலூா் மாநகராட்சியில் சாலை, குடிநீா், மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மாநகரில் குப்பைகள் தேங்காமல் உடனுக்குடன் அகற்றப்படும். பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து அவை நிறைவேற்றப்படும்.
மேலும், மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதோடு, அவா்களின் கல்வி மற்றும் அடிப்படைத் தேவைகள் பூா்த்தி செய்யப்படும். கடலூா் மாநகராட்சியை மேலும் தரம் உயா்த்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றாா்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள கிஷன்குமாா், திருநெல்வேலியில் பயிற்சி ஆட்சியராகவும், பழனி மற்றும் சிதம்பரத்தில் துணை ஆட்சியராகவும் பணியாற்றியவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










