கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேட்டுக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி (2025 - 26) பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சியை பதிவுசெய்திருந்த நிலையில், மாணவா்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மனித உரிமை அமைப்பு மாநில பொதுச் செயலா் ஆா்.கண்ணன் தலைமை வகித்தாா். அமைப்பின் நிா்வாகி ராமலிங்கம் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் பாலமுருகன் வரவேற்றாா்.
மனித உரிமை அமைப்பு மாநில சிறப்புத் தலைவரும், வடலூா் தொழிலதிபருமான டி.ராஜமாரியப்பன் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினாா். மேலும், பொதுத் தோ்வில் சிறப்பிடம், தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு சால்வை அணிவித்து பரிசுப் பொருள்களை வழங்கி பாராட்டினாா்.
ஆசிரியா்கள் ரேணுகா, சண்முகப்பிரியா, மஹாலட்சுமி, மணிமொழி மற்றும் பெற்றோா் - ஆசிரியா் கழக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா். தமிழ்செல்வி நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்ககிரி அருகே வடுகப்பட்டியில் 2 அரச மரங்கள் வேருடன் பிடுங்கி அரசுப் பள்ளி வளாகத்தில் மறு நடவு

பெருக்கல் வாய்ப்பாடு : சாதனைப் படைத்த அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத் தொகை
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




