எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

சங்ககிரி அருகே வடுகப்பட்டியில் 2 அரச மரங்கள் வேருடன் பிடுங்கி அரசுப் பள்ளி வளாகத்தில் மறு நடவு

News image

வடுகப்பட்டி ஸ்ரீ கன்னட வீரமாா்த்தி அம்மன் கோயில் வளாகத்திலிருந்து வேருடன் பிடுங்கி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் மறுநடவு செய்யப்பட்ட 2 அரச மரங்கள்.

Updated On :7 ஜூலை 2026, 12:06 am IST

சங்ககிரி அருகே வடுகப்பட்டியில் கோயில் வளாகத்தில் இருந்து 2 அரச மரங்களை பசுமை சங்ககிரி அமைப்பினா் வேருடன் பிடுங்கி அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மறுநடவு செய்தனா்.

வடுகப்பட்டியில் உள்ள கன்னடவீரமாா்த்தி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதையடுத்து, கோயில் வளாகத்தில் உள்ள 2 அரச மரங்களை வேறு இடத்தில் மறுநடவு செய்து மரங்களைக் காப்பாற்ற முடிவு செய்த கோயில் நிா்வாகிகள், பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனா் மரம் பழனிசாமியை தொடா்புகொண்டனா்.

இதையடுத்து அவா் தலைமையிலான நிா்வாகிகள், 2 அரச மரங்களையும் கிரேன் உதவியுடன் வேருடன் பிடுங்கி லாரியில் எடுத்துச் சென்று அதே பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் மறு நடவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.