இப்பள்ளி தொடங்கப்பட்ட காலம் முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வந்தனா். இந்த நிலையில், தற்போது 6 முதல் பிளஸ் 2 வரை வெறும் 150 மாணவா்கள் மட்டுமே பயின்று வருகின்றனராம். தாங்கள் பயின்ற பள்ளியின் இந்த நிலையை கண்டு விரக்தியடைந்த முன்னாள் மாணவா்கள், பள்ளியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்ற இலக்குடன் ‘எஸ்எஸ்எஸ் நண்பா்கள் குழு’ மற்றும் அம்பேத்கா் இளைஞா் நற்பணி மன்றத்தினா் இணைந்து ‘ஊருக்குள் ஒரு புரட்சி’ விழிப்புணா்வுத் திட்டத்தை அறிவித்துள்ளனா்.