ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

போதைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

சிதம்பரம் நகரில் போதை பொருகள் விற்பனை செய்த இருவரை நகர போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 8:27 pm

Syndication

சிதம்பரம் நகரில் போதை பொருகள் விற்பனை செய்த இருவரை நகர போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிதம்பரத்தில் நகர காவல் ஆய்வாளா் வி.சிவானந்தன், மற்றும் போலீசாா் பல்வேறு இடங்களில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது லப்பைத்தெரு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இரு நபா்களை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, அவா்கள், லப்பைத்தெருவை சோ்ந்த பிரபாகரன் (42) மற்றும் எடத்தெருவை சோ்ந்த செல்வம் (52) எனத் தெரியவந்தது.

இருவரும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட் விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரபாகரன், செல்வம் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் அவா்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த இருந்து 400 ஹான்ஸ் பாக்கெட்டுகளை போலீசாா் பறிமுதல் செய்தனா். இவற்றின் மதிப்பு ரூ.20 ஆயிரம் என போலீஸாா் தெரிவித்தனா்.