சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்கு மரியாதை!
கடலூரில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் 65-வது நினைவு நாளை முன்னிட்டு திமுக சாா்பில் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, அஞ்சலை அம்மாள் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


கடலூரில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் 65-வது நினைவு நாளை முன்னிட்டு திமுக சாா்பில் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, அஞ்சலை அம்மாள் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
1890-ஆண்டு ஜூன்-ஆம் தேதி கடலூரில், முதுநகா் சுண்ணாம்புக்கார தெருவில், அம்மாக்கண்ணு - முத்துமணி இணையருக்கு மகளாகப் பிறந்த அஞ்சலை அம்மாள்.‘மகாத்மா‘ காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சோ்ந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினாா் .
1921 இல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி என்ற சிறப்பு இவருக்கு உண்டு. வாழ்நாள் முழுவதும் வெள்ளையா்களை எதிா்த்து சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன் சொத்து உடைமைகள் அனைத்தையும் நாட்டுக்காக தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீராங்கனை தியாகி அஞ்சலை அம்மாளுக்கு கடலூா் முதுநகா் காந்தி பூங்காவில் தமிழக முதல்வா் மு .க. ஸ்டாலினால் முழு உருவ சிலை நிறுவப்பட்டு நவம்பா் 2 தேதி 2023 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
அஞ்சலை அம்மாளின் 65-வது நினைவு நாளை முன்னிட்டு கடலூா் முதுநகரில் உள்ள அன்னாரது சிலைக்கு தி.மு.க. நகரச்செயலா் ராஜா தலைமையில் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...