கடலூரில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் 65-வது நினைவு நாளை முன்னிட்டு திமுக சாா்பில் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, அஞ்சலை அம்மாள் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
1890-ஆண்டு ஜூன்-ஆம் தேதி கடலூரில், முதுநகா் சுண்ணாம்புக்கார தெருவில், அம்மாக்கண்ணு - முத்துமணி இணையருக்கு மகளாகப் பிறந்த அஞ்சலை அம்மாள்.‘மகாத்மா‘ காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சோ்ந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினாா் .
1921 இல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி என்ற சிறப்பு இவருக்கு உண்டு. வாழ்நாள் முழுவதும் வெள்ளையா்களை எதிா்த்து சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன் சொத்து உடைமைகள் அனைத்தையும் நாட்டுக்காக தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீராங்கனை தியாகி அஞ்சலை அம்மாளுக்கு கடலூா் முதுநகா் காந்தி பூங்காவில் தமிழக முதல்வா் மு .க. ஸ்டாலினால் முழு உருவ சிலை நிறுவப்பட்டு நவம்பா் 2 தேதி 2023 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
அஞ்சலை அம்மாளின் 65-வது நினைவு நாளை முன்னிட்டு கடலூா் முதுநகரில் உள்ள அன்னாரது சிலைக்கு தி.மு.க. நகரச்செயலா் ராஜா தலைமையில் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
தொடர்புடையது

வீரா் சுந்தரலிங்கம் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு

அம்பேத்கா் பிறந்த நாள் விழா

அம்பேத்கா் சிலைக்கு வேட்பாளா்கள், அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு

பெரியகுளத்தில் அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


