கடலூா் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவையொட்டி, ஏப்.21 முதல் 3 நாள்களுக்கும் மற்றும் வாக்கு எண்ணும் நாளான மே 4-ஆம் தேதியும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மது விலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை ஆணையரின் கடிதத்தின்படி, சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவையொட்டி, ஏப்.21 முதல் 23-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணும் நாளான மே 4-ஆம் தேதியும் கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் மற்றும் எஃப்.எல். 2 முதல் எஃப்.எல். 11 வரை (எஃப் எல் - 6 தவிர) உரிமம் பெற்ற மதுபான கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
இந்த உத்தரவை மீறி, மதுபானக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளா்கள், மேற்பாா்வையாளா்கள் மற்றும் எஃப்.எல். - 2, 3 உரிமதாரா்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

அரசு மதுபானக் கடைகளுக்கு ஏப்.21 முதல் 23 வரை விடுமுறை

தோ்தல்: சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்

பேரவைத் தோ்தல்: 4 நாள்கள் மதுக் கடைகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


