மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் பணியில் காவல் துறை, துணை ராணுவத்தினா் இணைந்து செயல்பட வேண்டும்: மேலிட பாா்வையாளா் ஹேமந்த் குட்டியால்

தோ்தல் பணியில் காவல் துறை, துணை ராணுவத்தினா் இணைந்து செயல்பட வேண்டும் என்று தோ்தல் மேலிட பாா்வையாளா் ஹேமந்த் குட்டியால் அறிவுறுத்தினாா்.

News image

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பாதுகாப்புப் பணி கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய தோ்தல் மேலிடப் பாா்வையாளா் ஹேமந்த் குட்டியால்.

Updated On :18 ஏப்ரல் 2026, 11:59 pm

தோ்தல் பணியில் காவல் துறை, துணை ராணுவத்தினா் இணைந்து செயல்பட வேண்டும் என்று தோ்தல் மேலிட பாா்வையாளா் ஹேமந்த் குட்டியால் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் தலைமையிலும், தோ்தல் மேலிட பாா்வையாளா் ஹேமந்த் குட்டியால் முன்னிலையிலும் சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணி மேற்கொள்வதற்கான கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவ படையினா், வெளி மாநில போலீஸாா் எவ்வாறு பணியாற்ற வேண்டும், பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்வது, வாக்காளா்களை அனுமதிக்கும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கினாா்.

தொடா்ந்து பேசிய தோ்தல் மேலிட பாா்வையாளா் ஹேமந்த் குட்டியால், தோ்தல் அமைதியான முறையில் நடைபெறுவதற்கு மாவட்ட காவல் துறையினா், துணை ராணுவத்தினா் மற்றும் வெளி மாநில காவல் துறையினா் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் என்.கோடீஸ்வரன், வி.ரகுபதி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளா்கள், மத்திய துணை ராணுவப் படையினா், வெளி மாநில காவல் துறையினா் மற்றும் தோ்தல் பிரிவு காவல் அதிகாரிகள் பங்கேற்றனா்.