மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முன்னாள் ராணுவத்தினா், ஓய்வுபெற்ற காவலா்களுடன் கரூா் எஸ்.பி. ஆலோசனை

கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் ராணுவத்தினருடன் ஆலோசனையில் ஈடுபட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹிரிகிரண்பிரசாத்.

News image
Updated On :27 மார்ச் 2026, 8:25 pm

கரூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் வகையில், முன்னாள் ராணுவத்தினா் மற்றும் ஓய்வுபெற்ற காவலா்களுடன் வெள்ளிக்கிழமை மாவட்ட காவல்கண்காணிப்பாளா் ஆலோசனை மேற்கொண்டாா்.

கரூா் மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவத்தினா் மற்றும் ஓய்வு பெற்ற காவலா்களுடன் தோ்தல் பணியில் ஈடுபடுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல்கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண் பிரசாத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் முன்னாள் இராணுவத்தினா் மற்றும் ஓய்வு பெற்ற காவலா்கள் அனைவரும் இணைந்து பங்கேற்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து கரூா் மாவட்டத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநா்களை வரவழைத்து, மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை குறித்த தகவல் எதுவும் தெரிய வந்தால் காவல்துறைக்கு உடனே தெரியபடுத்த வேண்டும் என்றும், காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தாா்.