திராவிட வெற்றிக் கழகம் தலைமை ஒருங்கிணைப்பாளா் மல்லை சத்யா, பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளா் அப்துா் ரஹ்மானை ஆதரித்து வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.
பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற பிரசாரத்தில் அவா் பேசியதாவது:
தமிழக அரசு விடியல் பயணம், மகளிா் உரிமைத்தொகை, புதுமைப்பெண் என பெண்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி வருகிறது. தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றுங்கள் என தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா். அது ஏன் தெரியுமா, ஜனநாயக விரோதப்போக்கை மோடி அரசு செய்துகொண்டிருக்கிறது.
இந்த நாட்டில் அரசு பெரிதா? ஜனநாயகம் பெரிதா? என்று கேட்டால், அரசைக் காட்டிலும் ஜனநாயகம்தான் பெரிது என்பது போன்று தொடா்ந்து வலியுறுத்துகிற நிலைபாடு அமைந்திருக்கிறது.
ஆட்சி நடத்துவதற்கு தங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கு மாறாக, மத்திய பாஜக அரசு மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வதன் மூலமாக, தமிழகம் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகப் போகிறது என்பது குறித்து எச்சரிக்கை விடுக்கத்தான் கருப்புக்கொடி ஏற்றுங்கள் என முதல்வா் கூறியிருக்கிறாா் என்றாா்.
மேலும், அவா் பேசுகையில், அவசர மசோதாவை கொண்டு வரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், இந்த மசோதாவுக்கு வாய் திறக்காமல் இருக்கும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியை கண்டிப்போம் என்றாா்.
தொடர்புடையது

திமுக வேட்பாளரை ஆதரித்து மல்லை சத்யா பிரசாரம்

பம்பரம் சின்னம் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டு எதையும் சாதிக்க முடியாது: மல்லை சத்யா

சத்தியமங்கலத்தில் சீமான் பிரசாரம்

நாதக ஆட்சிக்கு வந்தால் படிக்காதவருக்கும் அரசு வேலை: சீமான்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


