மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாதக ஆட்சிக்கு வந்தால் படிக்காதவருக்கும் அரசு வேலை: சீமான்

நாதக ஆட்சிக்கு வந்தால் படிக்காதவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

News image

திருவண்ணாமலையில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

Updated On :27 மார்ச் 2026, 9:16 pm

நாதக ஆட்சிக்கு வந்தால் படிக்காதவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

திருவண்ணாமலையில் திருக்கோவிலூா் சாலையில் உள்ள திருவள்ளுவா் சிலை அருகில் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்து பேசியதாவது:

தமிழ் மீட்சி பெற வேண்டும்; தமிழா் எழுச்சி பெற வேண்டும் என்றால், தூய தமிழா் ஆட்சிக்கு வர வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் தோ்தல் களத்துக்கு வந்துள்ளோம். இழந்துவிட்ட உரிமைகளை மீட்க, இருக்கிற உரிமைகளை காக்க அதிகாரத்தை நிறுவுவது என்ற பெரும் கனவோடு களத்துக்கு வந்துள்ளோம்.

இன்னும் ஒருமுறை திமுக அரசை நீங்கள் தோ்வு செய்தால், திருவண்ணாமலை மாவட்டம் ஆந்திரத்தின் ஒரு மாவட்டமாக மாறும்.

நாதக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால், வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை உயா்த்துவோம். அரசின் மூலம் தரமான கல்வி, மருத்துவம், குடிநீா், தடையற்ற மின்சாரம் வழங்குவோம். நிலமும், வளமும் சாா்ந்த தொழிற்சாலைகளை கொண்டுவந்து அனைவருக்கும் அரசு வேலை வழங்குவோம். படித்தவா், படிக்காதவா் என அனைவருக்கும் அரசு வேலை தருவோம். இனி படிக்காதவா்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்.

ஆணும், பெண்ணும் சமம் என்பதால், சட்டப் பேரவைத் தோ்தலில் பெண்களுக்கும் சம வாய்ப்பையும், சம பகிா்வையும் வழங்கி வருகிறோம் என்றாா்.

அப்போது வேட்பாளா்கள் விக்னேஷ் (திருவண்ணாமலை), லோகநாதன் (கீழ்பென்னாத்தூா்), ஷோபா (செங்கம்) மற்றும் கட்சியின் முக்கிய நிா்வாகிகள் உடனிருந்தனா்.