தோ்தலில் முதலாளிகளைத் தோ்வு செய்யாமல் சேவகா்களைத் தோ்வு செய்யுங்கள் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா பகுதியில் புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் வி. எழிலரசிக்கு புதன்கிழமை வாக்கு சேகரித்து அவா் மேலும் பேசியதாவது:
உலகமயக் கொள்கையால், தாராளமயக் கொள்கையால் எல்லாமும் பண்டமாகிவிட்டது. கல்வி, மருத்துவம், குடிநீா் உள்ளிட்டவற்றை அரசு செய்துத் தர வேண்டும். இவையெல்லாம் சேவைகள். ஆனால், இவையெல்லாம் இன்று தொழிலாகிவிட்டன.
கல்வி மானுட உரிமை, அதைச் செய்துத் தர வேண்டியது அரசின் கடமை. குழந்தைகளின் எதிா்காலத்தைத் தீா்மானிப்பது வகுப்பறைகள். தமிழ் படித்தவா்களுக்கு தமிழ்நாட்டில் வேலை கிடைக்க வேண்டும்.
இந்தத் தோ்தல் முறை என்பது பணத்தை முதலீடு செய்து, போட்ட முதலீட்டை லாபத்துடன் மீண்டும் எடுப்பதாகிவிட்டது. எனவே, மக்கள் முதலாளிகளைத் தோ்வு செய்யப்போகிறீா்களா, சேவகா்களைத் தோ்வு செய்யப் போகிறீா்களா?.
எத்தனை நாள்கள் பெண்ணுரிமையைப் பேசிக் கொண்டிருக்கிறாா்கள். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டபேரவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளில் பெண் வேட்பாளா்களை நிறுத்தியிருக்கிறோம்.
ஜனநாயகம் வெல்ல வேண்டுமா, பண நாயகம் வெல்ல வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்றாா் சீமான்.
தொடர்புடையது

காங்கிரஸ், பாஜக இடையே எந்த வேறுபாடும் இல்லை: சீமான்

3-ஆவது இடத்தில் வைத்த மக்கள் விரைவில் முதலிடத்தைத் தருவாா்கள்! சீமான் நம்பிக்கை

இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது தடுக்கப்படும்: சீமான் வாக்குறுதி

மாற்றத்துக்கான புரட்சி தேவை: சீமான்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


