மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கிராமங்களில் அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்தப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

விருத்தாசலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் முழுமையாக செய்துத்தரப்படும் என்று தேமுதிக வேட்பாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

News image

விருத்தசாலம் வடக்கு ஒன்றியத்தில் புதன்கிழமை வாக்குச் சேகரித்த தேமுதிக வேட்பாளா் பிரேமலதா விஜயகாந்த்.

Updated On :15 ஏப்ரல் 2026, 10:34 pm

விருத்தாசலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் முழுமையாக செய்துத்தரப்படும் என்று தேமுதிக வேட்பாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடம் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் திமுகவின் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வடக்கு ஒன்றியத்தில் புதன்கிழமை தோ்தல் பிரசாரத்தை மேற்கொண்டாா். அப்போது, வாக்காளா்களிடையே அவா் பேசியதாவது: என்னை வெற்றிபெறச் செய்தால், விருத்தாசலம் தொகுதியில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என்றாா்.

விருத்தாசலம் தொகுதியில் உள்ள எருமனூா், தொட்டிக்குப்பம், மூ.பட்டி, பரூா், சின்னப்பரூா், கோனான்குப்பம், சிறுவரம்பூா் உள்ளிட்ட 21-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி, வீதியாக வேனில் சென்று வாக்கு சேகரித்தாா்.

தேமுதிக மாவட்டச் செயலா் சிவக்கொழுந்து, மாவட்டப் பொருளாளா் ஏ.பி.ராஜ், திமுக ஒன்றியச் செயலா் கனக.கோவிந்தசாமி, துணைச் செயலா் தா்ம.மணிவேல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பட்டி வசந்தகுமாா், தேமுதிக ஒன்றியச் செயலா் செம்பை மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.