மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விருத்தாசலம் மாவட்டத்தை உருவாக்க வலியுறுத்துவேன்! - பிரேமலதா விஜயகாந்த்

விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வலியுறுத்துவேன் என்று விருத்தாசலம் பேரவைத் தொகுதி வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

News image

பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 6:44 pm

சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிவெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன் விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்துவேன் என்று தேமுதிக பொதுச் செயலரும், விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணி சாா்பில், விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொதுச் செயலா் பிரமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறாா். திங்கள்கிழமை விருத்தாசலம் வந்த அவா், விருத்தாசலம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தாா். பின்னா், பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளா்களிடம் தெரிவித்தாவது:

விருத்தாசலம் கொளஞ்சியப்பா், விருத்தகிரீஸ்வரரை வணங்கி வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். எங்கள் உள்ளத்தில் நிலைத்திருக்கக்கூடிய தொகுதி விருத்தாசலம். இந்தத் தோ்தலில் வெற்றிபெற்று தொகுதி மக்களுக்கு விஜயகாந்த் விட்டுச் சென்ற பணிகளை செய்வேன்.

சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிவெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன் விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்துவேன். 2006-க்குப் பிறகு 20 ஆண்டுகள் கடந்து மீண்டும் வரலாறு திரும்புகிறது.

விருத்தாசலத்தை மிகச்சிறந்த தொகுதியாக மாற்ற பல திட்டங்கள் வைத்துள்ளேன். அதை பிரசாரத்தில் கூறுவேன். திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும் என்பது பல ஆண்டுகளாக நினைத்த ஒரு விஷயம். கருணாநிதியும், விஜயகாந்தும் இருக்கும்போதே நடக்க வேண்டியது. தாமதமாக இப்போது நடந்துள்ளது என்றாா்.