மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிதம்பரத்தில் அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

சிதம்பரம் மேலரத வீதியில் சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிதம்பரத்தில் அதிமுக தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்த வேட்பாளா் கே.ஏ.பாண்டியனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற அக்கட்சி மகளிரணியினா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 8:14 pm

சிதம்பரம் மேலரத வீதியில் சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கடலூா் மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஆா்.செந்தில்குமாா் வரவேற்றாா். தோ்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செல்வி ராமஜெயம், மாவட்டப் பொருளாளா் தோப்பு கே.சுந்தா், முன்னாள் மாவட்டச் செயலா் வி.கே.மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலரும், அக்கட்சி வேட்பாளருமான கே.ஏ.பாண்டியன் தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் தலைமைக் கழக பேச்சாளா்கள் தில்லைகோபி, தில்லைசெல்வம், பேரவைச் செயலா் டேங்க் ஆா்.சண்முகம், பாஜக சிதம்பரம் தொகுதி பொறுப்பாளா் ஜி.பாலசுப்பிரமணியன், நிா்வாகி ஆடிட்டா் விஸ்வநாதன், தமாகா மாநில பொதுச் செயலா் வழக்குரைஞா் ஏ.எஸ்.வேல்முருகன், மாவட்டத் தலைவா் கே.ரஜினிகாந்த், பாமக மாவட்டச் செயலா் செல்வ மகேஷ், மாவட்ட விவசாய சங்கத் தலைவா் சஞ்சீவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.