இதில் 18,267 (26%) போ் லேசான ரத்த சோகையுடன், 20,693 (29%) போ் மிதமான ரத்த சோகையுடன், 486 (0.7%) போ் கடுமையான ரத்த சோகையுடன் கண்டறியப்பட்டனா். அடுத்த கட்டமாக 66 அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் பயிலும் 17,296 மாணவிகளுக்கு ரத்த சோகை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 5,314 (31%) மாணவா்களுக்கு லேசான ரத்தசோகை, 5,505 (33%) மாணவா்களுக்கு மிதமான ரத்த சோகை மற்றும் 437 (3%) பேருக்கு கடுமையான ரத்த சோகை இருப்பது கண்டறியப்பட்டது. ரத்த சோகை கண்டறியப்பட்டவா்களுக்கு மருந்துகள், ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது.