Listen to this article
By Syndication
Syndication
சிதம்பரம் - கிள்ளை சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கிள்ளை பேரூராட்சி துணைத் தலைவா் கிள்ளை ரவிந்திரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தொல்.திருமாவளவன் எம்.பி. மற்றும் மத்திய ரயில்வே துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கிள்ளை ரயில் நிலையம் ஆங்கிலேயா் காலம் முதல் இயங்கி வருகிறது. இதில், கிள்ளை - சிதம்பரம் இடையே உள்ள ரயில்வே கேட்டுக்கு கிழக்கே கிள்ளை, பரங்கிப்பேட்டை உள்பட இரண்டு பேரூராட்சிகளும், 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளும், கடல்வாழ் உயிரின உயராய்வு மையம் மற்றும் பிச்சாவரம் படகு குழாம் உள்ளிட்டவை உள்ளன.
இந்த ரயில்வே கேட்டை கடந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனா். ரயில் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், இந்த கேட் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை மூடப்படுகிறது.
இதனால், மாணவா்கள், அரசு ஊழியா்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். எனவே, கிள்ளை ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பால பகுதியில் உயா்நிலை மேம்பாலம் அமைய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கிள்ளை பேரூராட்சியில் சேரும் சகதியுமான சாலை: சீரமைக்கக் கோரி வாலிபா் சங்கத்தினா் மனு
மாயமான பள்ளி மாணவிகள் மூவா் போலீஸில் ஒப்படைப்பு


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

