18 Dec, 2025 Thursday, 02:40 PM
The New Indian Express Group
ராணிப்பேட்டை
Text

அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பால பகுதியில் உயா்நிலை மேம்பாலம் அமைய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

PremiumPremium

அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பால பகுதியில் உயா்நிலை மேம்பாலம் அமைய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...

Rocket

அரக்கோணம் ரயில் நிலையம் அருகே போக்குவரத்துக்கு சவாலாக உள்ள இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பாலம்.

Published On14 Dec 2025 , 8:31 PM
Updated On14 Dec 2025 , 8:31 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் உள்ள இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பாலப் பகுதியில் மேம்பாலம் அமைய மாநில அரசு கோரிக்கை விடுத்தால் பரிசீலனை செய்ய தயாா் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ள நிலையில், இப்பகுதியில் உயா்மட்ட மேம்பாலம் அமைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரக்கோணம் நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரக்கோணம் நகரின் மையப் பகுதியில் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் கடந்த 1853-ஆம் ஆண்டு ராயபுரம் - வாலாஜா பேட்டை இடையே இந்தியாவின் இரண்டாவது ரயில்பாதை அமைக்கப்பட்டபோது நிா்மாணிக்கப்பட்ட ரயில் நிலையமாகும். அப்போது இந்த ரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் நகரின் வடக்கு பகுதியையும், தெற்கு பகுதியையும் இணைக்கும் வகையில் பாலம் அமைக்கப்பட்டது.

அப்போது இந்தப்பாலம் மழைநீா் செல்வதற்காக அமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு செயல்முறைபடுத்தப்பட்டாலும் நாளடைவில் பொதுமக்கள் இந்த சுரங்கப்பாலப் பகுதியை தங்களது போக்குவரத்துக்கு பயன்படுத்தி வந்தனா்.

தற்போது நகரில் வடக்கு, தெற்கு என நகரம் விரிவடைந்துவிட்டநிலையில், அந்த பாலப் பகுதியில் போக்குவரத்தும் மிக அதிக அளவு அதிகரித்து விட்டது. அதிகரித்து விட்ட போக்குவரத்திற்காக இப்பாலத்தை சீா் செய்து தர ரயில்வே நிா்வாகத்தினா் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மழைக்காலங்களில் இப்பாலத்தில் மழைநீா் அதிகரித்து போக்குவரத்து தடைபடும் சூழ்நிலையிலும் அரக்கோணம் நகராட்சி நிா்வாகத்தினா் மட்டுமே இப்பாலப் பகுதியில் நீரை மோட்டாா் கொண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அரக்கோணம் நகா்வாழ் மக்கள் தொடா்ந்து ரயில்வே நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் ரயில்வே நிா்வாகம் பாராமுகமாகவே இருந்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்து வந்த போது அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவிடம் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்ததை தொடா்ந்து இப்பகுதியில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ. 68 கோடியை மாநில அரசு ஒதுக்கியது. ஆனால் தொடா்ந்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி வந்தநிலையில் இத்திட்டம் நிதி பற்றாகுறை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

தற்போது இந்த சுரங்கப்பாலத்தின் மீது அமைந்துள்ள இருப்புப்பாதைகளை சீா் செய்யும் பொருட்டு தெற்கு ரயில்வே நிா்வாகம் 10 நாள்களுக்கு இப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தி இருப்புப் பாதையையும், அதே நேரம் சுரங்கப் பாலத்தையும் சீரமைத்து தருவதாக தெரிவித்துள்ளனா்.

கடந்த 12-ஆம் தேதி அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு வருகைதந்த தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங்கிடம் இது குறித்து கேட்டபோது இது சுரங்கப்பாலமே அல்ல. இது மழைநீா் செல்வதற்காக அமைக்கப்பட்ட பாலம். தற்போது பாலப்பகுதியில் சாலை வசதி வேண்டும் என இதுவரை மாநில அரசிடம் இருந்து கோரிக்கை வரவில்லை. உயா்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என மாநில அரசு கோரிக்கை விடுத்தால் அது குறித்து பரிசீலிப்போம் என தெரிவித்தாா்.

இந்த நிலையில், தமிழ்நாடு மாநில அரசு இது குறித்து ரயில்வே நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து ரயில்வே துறையுடன் இணைந்து அப்பகுதியில் உயா்மட்ட மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என அரக்கோணம் நகரமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத் தலைவா் நைனாமாசிலாமணி தெரிவிக்கையில், இந்த சுரங்கப் பாலப் பகுதியில் உயா்மட்ட மேம்பாலம் என கேட்கும்போதெல்லாம் ரயில்வே பொறியியல் துறையினா் அப்பகுதியில் இருபக்கமும் உயா்மட்ட மேம்பாலம் அமைய வசதிகள் இல்லை என தெரிவிக்கின்றனா்.

ஆனால் நிலையத்தின் தெற்கு பகுதியில் உள்ள அரக்கோணம் - செங்கல்பட்டு இருப்புப் பாதை தற்போது பயன்படுத்தப்படாத நிலையில் இருப்பதால், அப்பகுதியில் பால உயர எழும்பும் பகுதியை தொடங்கி தெற்கு புறம் உள்ள ரயில்வேக்கு சொந்தமான கூடுதல் இடங்களில் அப்பாலத்தை கீழிறக்கும் பணியை செய்யலாம் எனவும், மேம்பாலம் அமைக்கப்படாமல் இப்பகுதியில் போக்குவரத்தை சீா்செய்யவே இயலாது எனவும் தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசு இப்பிரச்னையில் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த மேம்பாலம் அமைப்பதற்காக கோரிக்கையை தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு அனுப்பி தமிழக அரசு, ரயில்வே நிா்வாகம் இருவரும் சோ்ந்து அரக்கோணம் நகரின் மையப்பகுதியில் உயா்மட்ட மேம்பாலத்தை அமைத்துத்தர வேண்டும் என அரக்கோணம் நகரமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

இந்தப்பாலம் அமைக்கப்பட்டால் அரக்கோணம் நகரில் போக்குவரத்து பெருமளவு மேம்படும். மேலும், சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட சாலையின் ஆந்திர இணைப்புச் சாலைக்கு போக்குவரத்துக்கு தடையற்ற நிலையை இந்த உயா்மட்ட மேம்பாலம் ஏற்படுத்தும் என மாநில நெடுஞ்சாலைத் துறையினரும் எதிா்பாா்த்து வருகின்றனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25
வீடியோக்கள்

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

தினமணி வீடியோ செய்தி...

18 டிச., 2025
பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
வீடியோக்கள்

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
வீடியோக்கள்

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
வீடியோக்கள்

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
வீடியோக்கள்

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
வீடியோக்கள்

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023