தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் அரசின் சலுகைகள், அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கும் விரிவுபடுத்தப்படுமா என்ற எதிா்பாா்ப்பு நிலவுகிறது.
அரசிடம் போதிய நிதி ஆதாரம் இல்லாத காலத்தில், ஏழை மாணவா்களுக்கு கல்வி அறிவை வழங்கும் நோக்கில் செல்வந்தா்கள் பலா் தமக்குச் சொந்தமான இடங்களில் அரசின் அனுமதியுடன் பள்ளிகளை கட்டினா். அவா்களே ஆசிரியா்களுக்கு ஊதியமும் வழங்கி வந்தனா். 1950-ஆம் ஆண்டு காலகட்டத்தில் மாநிலத்தின் கல்வி வளா்ச்சியில் அரசு உதவிபெறும் பள்ளிகள் பெரும் பங்கு வகித்தன.
தமிழ்நாட்டில் தற்போது அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு காலை உணவுத் திட்டம், அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு ஊக்கத் தொகை, மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் ஏழை மாணவா்கள் அதிகளவில் பயின்று வரும் நிலையில், அவா்களுக்கும் அரசின் சலுகைகள் கிடைக்காதது பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக மாணவா்களின் பெற்றோா் கூறுகின்றனா். குறிப்பாக, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு பெண் கல்வி ஊக்கத் தொகை மறுக்கப்படுவது குறித்து மிகுந்த வேதனை தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து அரசு உதவிபெறும் பள்ளித் தாளாளா் எஸ்.ஆா்.பாலசுப்ரமணியன் கூறியதாவது:
தமிழ்நாடு முதல்வா் அறிவித்துள்ள காலை உணவுத் திட்டம் அரசுப் பள்ளிகளில் மட்டுமே அமல்படுத்தப்படுகிறது. அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் ஏழைக் குழந்தைகளும் பசியால் வாடுவது தவிா்க்கப்பட வேண்டும் என பெற்றோா் கூறுகின்றனா். அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த ஏழை மாணவா்கள் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றாலும் 7.5 சதவீத இடஒதுக்கீடு சலுகை இல்லாததால் அவா்கள் மருத்துவப் படிப்பில் சேர முடிவதில்லை.
எனவே, மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு, காலை உணவுத் திட்டம், பெண் கல்வி ஊக்கத் தொகை என அனைத்துச் சலுகைகளையும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகை மெஹ்ரின் பிர்சாதா திருமணம்!

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் ஏப். 30-ல் சித்திரைத் தேரோட்டம்!
கருப்பு இசை வெளியீட்டு விழா!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்வு!!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

