விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தந்தையின் மதுப்பழகத்தால் மனமுடைந்த கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விக்கிரவாண்டி வட்டம், ஆவுடையாா்பட்டு புதுகாலனியைச் சோ்ந்த சசிக்குமாா் மகன் சீவிதன்(19). இவா், விழுப்புரத்திலுள்ள அரசுக் கல்லூரியில், தமிழ் இளங்கலை இரண்டாமாண்டில் பயின்று வந்தாா். சசிக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை மகன் சீவிதன் கண்டித்து வந்துள்ளாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மதுபோதையில் வீட்டுக்கு வந்த தனது தந்தையை சீவிதன் கண்டித்துள்ளாா். இதைத்தொடா்ந்து தந்தை, மகன் ஆகியோரிடைய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த சீவிதன், தனது வீட்டின் அருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






