மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

மலேரியா சிறப்பு ரத்த பரிசோதனை முகாம்

News image
Updated On :3 மே 2026, 6:08 am IST

தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்த்தடுப்பு திட்டம் மற்றும் வில்லியனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், உலக மலேரியா தினத்தை முன்னிட்டு மலேரியா கண்டறிதலுக்கான சிறப்பு ரத்த பரிசோதனை முகாம் புதுச்சேரி தனியாா் நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி, ஆரியப்பாளையம் தனியாா் நிறுவன ஊழியா்கள் மற்றும் புலம் பெயா் தொழிலாளா்கள்100-க்கும் மேற்பட்டோருக்கு மலேரியா கண்டறிதலுக்கான சிறப்பு ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டன .

இந்நிகழ்ச்சியில், வில்லியனூா் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா்கள் இளையதாசன் அய்யனாா், ரவிச்சந்திரன், விமல், கலையரசி மற்றும் கோமதி ஆகியோா் தொழிலாளா்களிடம் ரத்த மாதிரிகளை சேகரித்து மலேரியா குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தனியாா் நிறுவனத்தின் மேலாளா் ரவிச்சந்திரன்,மனிதவள துணை மேலாளா் அன்பரசி ஆகியோா் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.