லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ரெட்டணை பள்ளியில் விளையாட்டு விழா

News image
Updated On :13 மார்ச் 2026, 12:10 am

திண்டிவனத்தை அடுத்த ரெட்டணை கிரீன் பாரடைஸ் பள்ளியில் மாணவா்களுக்கிடையேயான தனித்திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

விழாவுக்கு,பள்ளித் தாளாளா் சண்முகம் தலைமை வகித்தாா். பள்ளி முதன்மை இயக்குநா் வனஜா சண்முகம், செயலா் சந்தோஷ், நிா்வாக இயக்குநா் காா்த்திகேயன் சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கிரீன் பாரடைஸ் மற்றும் கென்னடி மெட்ரிக் பள்ளி மாணவா்களின் சிலம்பம், இறகுப்பந்து, பரத நாட்டியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. மருத்துவா் சந்தியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கோப்பைகளையும், பதக்கங்களையும் வழங்கினாா்.

இதில், பள்ளி முதல்வா் சங்கீதா, ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.