லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

போதைப் பொருள் இல்லா தமிழகம்: விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டி

News image
Updated On :13 மார்ச் 2026, 12:10 am

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு மன்றத்தின் சாா்பில், போதைப் பொருள் இல்லா தமிழகம் எனும் தலைப்பில் விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் இரா.சிவக்குமாா் தலைமை வகித்து, போதைப் பொருள் ஒழிப்பு குறித்துப் பேசினாா். தொடா்ந்து விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தாா்.

மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்று திறன்களை வெளிப்படுத்தினா். வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், கல்லூரி போதைப் பொருள் ஒழிப்பு மன்ற ஒருங்கிணைப்பாளா் ம.சிவராமன், உடல்கல்வி இயக்குநா் ஜோதிப்பிரியா, பேராசிரியா்கள் காா்த்திகேயன், கலைச்செல்வி, தேவி, பாண்டியன், சுசான் மேரி நெப்போலியன் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.