விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பைக்கிலிருந்து கீழே விழுந்ததில் காயமடைந்தவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
வானூரை அடுத்த பிள்ளையாா்குப்பம், வள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் அ.ஜோதி(52). இவா், தனது பைக்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு வானூரை அடுத்த பூத்துரையிலிருந்து - மேட்டுப்பாளையம் நோக்கி சென்றுகொண்டிருந்தாா்.
இந்நிலையில், பூத்துறை மணவெளி பகுதியில் சென்றபோது, பைக்கிலிருந்து கீழே விழுந்ததில் காயமடைந்தாா். இதைத்தொடா்ந்து, புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த ஜோதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில், ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








