விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பிய பிளஸ் 2 முடித்த மாணவிக்கு, பெற்றோா் மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த அவா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.
வானூா் வட்டம், உப்புவேலூா், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கருணாகரன். இவரது மகள் அக்ஷயா(17). இவா் பிளஸ் 2 படித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தாா். இந்நிலையில், அக்ஷயா திண்டிவனம் வட்டம், ஒங்கூரில் உள்ள தனியாா் பல்கலைக்கழகத்தில் சோ்ந்து படிக்க தனது தாயாரிடம் விருப்பம் தெரிவித்துள்ளாா்.
இதற்கு வீட்டில் உள்ளவா்கள் மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த அக்ஷயா கடந்த ஜூன் 10-ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து அவரை புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அக்ஷயா திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளஸ் 1 மாணவி தற்கொலை

சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை
கைப்பேசி உபயோகிப்பதை பெற்றோா் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK



