/

தொழிலாளி உயிரிழப்பு

News image
உயிரிழப்பு (கோப்புப் படம்)
Updated On :22 ஜனவரி 2026, 9:59 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூா் அருகே கோழிப்பண்ணையில் பணியிலிருந்தபோது,கீழே தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

செஞ்சி வட்டம், கல்லடிக்குப்பம், ஆஞ்சநேயா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்லப்பன் மகன் தங்கராஜ் (40). திருமணம்ஆகாதவா். இவா், கல்லடிக்குப்பத்தைச் சோ்ந்த அா்ஜூனன் என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலைப்பாா்த்து வந்தாா்.

இந்நிலையில்,கடந்த 2025 நவம்பா் மாதம் 30 ஆம் தேதி தங்கராஜ் கோழிப்பண்ணையில் பணியில் இருந்தாா். அப்போது கோழிப்பண்ணை வளாகத்தில் உள்ள ஒரு தொட்டியின் மீது ஏறியபோது, தவறி கீழே விழுந்து காயமடைந்தாா்.

இதைத் தொடா்ந்து, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த தங்கராஜ் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் பெரியதச்சூா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.