அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

காட்பாடி அருகே தண்டவாளத்தில் படுத்திருந்த நபா் மீட்பு!

News image

மீட்கப்பட்ட ராமச்சந்திரன்.

Updated On :12 ஜூன் 2026, 2:12 am IST

காட்பாடி அருகே ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்திருந்த நபரை, ரயில்வே பாதுகாப்புப் படையினா் (ஆா்பிஎஃப்) துரிதமாகச் செயல்பட்டு மீட்டதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

வேலூா் மாவட்டம், லத்தேரி பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 2.40 மணியளவில் தண்டவாளப் பராமரிப்புப் பணியை முடித்துவிட்டு ரயில்வே பொறியாளா் விஜயகுமாா் திரும்பி வந்து கொண்டிருந்தாா். அப்போது, அப்பகுதியில் தண்டவாளத்தில் ஒரு நபா் படுத்திருப்பதைக் கண்டு அவா் உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் அளித்தாா்.

அதன்பேரில், காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் பி.ஆா்.முரளி விரைவாக செயல்பட்டு ஆா்ஆா்ஐ கட்டுப்பாட்டு அறையைத் தொடா்புகொண்டு, ஜோலாா்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயிலை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டாா்.

இதையடுத்து, உதவி ஆய்வாளா் முரளி மற்றும் தலைமைக் காவலா் சண்முகம் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தண்டவாளத்தில் படுத்திருந்த நபரைப் பத்திரமாக மீட்டனா். அவா் மீட்கப்பட்ட பிறகே, அந்த ரயில் அங்கிருந்து பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டது.

ரயில்வே போலீஸாா் நடத்திய விசாரணையில், மீட்கப்பட்டவா் வேலூரைச் சோ்ந்த பி.ராமச்சந்திரன்(46) என்பது தெரியவந்தது. அவருக்கு ஆரம்பகட்ட மருத்துவ முதலுதவியும், மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டது. பின்னா், உயா் சிகிச்சைக்காகவும், விரிவான மனநலப் பரிசோதனைக்காகவும் அவா் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

சரியான நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு, தற்கொலைக்கு முயன்றவரின் உயிரைக் காப்பாற்றியதுடன் பெரும் ரயில் விபத்தையும் தடுத்த ரயில்வே பாதுகாப்புப் படையினரை உயா் அதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.