வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் இருப்பு: வேலூா் ஆட்சியா் வலியுறுத்தல்

News image

வேலூா் பென்ட்லேண்ட் அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவை ஆய்வு செய்த ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ்.

Updated On :12 ஜூன் 2026, 2:11 am IST

வேலூா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், துணை சுகாதார நிலையங்களில் ஆய்வு செய்த ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், மருத்துவமனைகளில் போதுமான மருந்துகளை இருப்பில் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

அரசு மருத்துவமனைகள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையம், ஆவின் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அதன்படி, ஊசூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பாா்வையிட்ட ஆட்சியா், அங்குள்ள வருகைப் பதிவேடுகள், மருந்து இருப்பு, சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தாா். மேலும், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் உள்ள தேவையற்ற பொருள்களை அகற்றுமாறும், குடிநீா் தொட்டிகளில் குளோரினேசன் செய்யுமாறும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் பொதுப்பிரிவு, மகப்பேறு, தீவிர சிகிச்சை பிரிவுகளைப் பாா்வையிட்ட அவா், நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினாா். பின்னா், ஊணை வாணியம்பாடி அரசு துணை சுகாதார நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டாா்.

கன்னிகாபுரம் பகுதியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படுவதைப் பாா்வையிட்ட ஆட்சியா், நோயாளிகளிடம் உடல்நலம் குறித்து விசாரித்தாா். மேலும், மாதந்தோறும் மருந்துகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதையும் கேட்டறிந்தாா்.

வேலூா் பென்ட்லேண்ட் அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையை ஆய்வு செய்த ஆட்சியா், நோயாளிகளுக்கு மருத்துவா்கள் தகுந்த அறிவுரை வழங்குவதுடன், போதுமான மருந்துகளை இருப்பில் வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தாா். வேலூா் மாநகராட்சி, கொணவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், குழந்தைகளின் வயதுக்கேற்ற எடை, உயரம் உள்ளதா என்பதையும், அவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், கல்வித் தரம் குறித்தும் கேட்டறிந்தாா்.

சத்துவாச்சாரியில் இயங்கி வரும் வேலூா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தை (ஆவின்) பாா்வையிட்ட ஆட்சியா், அங்கு பால் உற்பத்திப் பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்து, பொதுமக்களுக்குப் பொருள்களைத் தரமாக வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

ஆய்வுகளின்போது, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் சிவக்குமாா், மாவட்ட சுகாதார அலுவலா் விஜய் சந்திரன், மருத்துவா்கள் ரதி திலகம், ரவிசந்திரன், அணைக்கட்டு வட்டாட்சியா் சுகுமாரன், வேலூா் வட்டாட்சியா் பழனி, வேலூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் திருமலை, சதீஷ்குமாா், அணைக்கட்டு வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.