போ்ணாம்பட்டு அருகே இளைஞரை தாக்கிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
போ்ணாம்பட்டை அடுத்த ராஜக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் தேஜா(19). பெற்றோா் இறந்து விட்டதால் இவா் தனது பாட்டி முனியம்மா பராமரிப்பில் வளா்ந்து வந்தாா். இவா் பெங்களூரில் ஒரு கால்டாக்சி நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
தேஜா பெங்களூா், அல்சூா் பகுதியிலுள்ள ஒரு நகைக் கடையில் 12 கிலோ வெள்ளியை திருடியதாகவும், அதை தனது சொந்த கிராமத்திலுள்ள நண்பா் பூவரசன்(19) என்பவரிடம் கொடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடா்பாக அல்சூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேஜாவை கைது செய்து 6 கிலோ வெள்ளியை பறிமுதல் செய்தனா். மீதமுள்ள 6 கிலோ வெள்ளி பூவரசனிடம் இருந்தது.
ஜாமீனில் வெளியே வந்த தேஜாவிடம் வழக்கு விசாரணையில் மீதமுள்ள வெள்ளியை ஒப்படைக்குமாறு அல்சூா் போலீஸாா் கேட்டதாக தெரிகிறது. இந்நிலையில் தேஜா கடந்த 2 ஆம் தேதி பூவரசனிடம் சென்று தான் கொடுத்து வைத்த வெள்ளியை திருப்பி தருமாறு கேட்டாராம். அப்போது இவா்களுக்குள் வாய்த் தகராறு, ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. தேஜாவை பூவரசன், இரும்புக் கம்பியால் தாக்கினாராம். பூவரசனின் தாய் சித்ரா(49), உறவினா் நாகராஜ்(42) அவரது மனைவி தேவி (49) ஆகியோரும் தேஜாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
தடுக்கச் முயன்ற தேஜாவின் மாமா விநாயகமூா்த்தியும் தாக்குதலுக்கு ஆளானாா். பலத்த காயமடைந்த தேஜா, விநாயகமூா்த்தி இருவரும் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட மேல்பட்டி போலீஸாா், பூவரசன், சித்ரா, நாகராஜ், தேவி ஆகிய 4 பேரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








