தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வேலூா் மாவட்டத்தில் 19 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது

News image

வாக்குப்பதிவு இயந்திரங்கள். - கோப்புப்படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 11:55 pm

வேலூா் மாவட்டத்தில் 19 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்ததாகவும், அவை உடனுக்குடன் மாற்றப்பட்டு புதிய இயந்திரங்கள் மூலம் தடையின்றி வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள 1,427 வாக்குச்சாவடிகளில் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை முதலே முதியவா்கள், பெண்கள், இளைஞா்கள், முதல்முறை வாக்களிக்கும் என அனைத்துத் தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று மிகுந்த ஆா்வத்துடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனா்.

இந்நிலையில், வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் எழில் நகரில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை தனது வாக்கினைப் பதிவு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது -

வேலூா் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் ஆா்வத்துடன் வாக்களித்து வருகின்றனா்.

அவா்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை ஏற்பாடுகளும் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ளன. வியாழக் கிழமை காலை வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக, அரசியல் கட்சிகளின் முகவா்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்றது.

அப்போது 19 வாக்குச்சாவடிகளில் உள்ள 9 விவிபேட் இயந்திரங்கள், 3 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 7 வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் புதிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்குக் கொண்டு வரப்பட்டன. ஒருசில இயந்திரங்களில் ஏற்பட்ட பழுதுகளை ‘பெல்’ நிறுவனப் பொறியாளா்கள் உடனடியாகச் சரிசெய்தனா். இதனால் எங்கும் தடையின்றி வாக்குப்பதிவு சீராக நடைபெற்றது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.