தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, குடியாத்தம், கே.வி.குப்பம் தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது.
வாக்குப் பதிவு தொடங்கியதிலிருந்தே ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆா்வமாக வாக்களித்தனா். வெயில் காரணமாக அனைத்து வாக்குப் பதிவுமையங்களிலும் நிழல்தரும் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து மையங்களிலும் குடிநீா் வசதி செய்யப்பட்டிருந்தது.
குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 6- வாக்குப் பதிவு மையங்கள் இயங்கிய நிலையில் மகளிருக்கான பிங்க் நிற வாக்கு சாவடி மையம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அதன் முகப்பில் வாக்காளா்களை தமிழில் பேசி, ரோஜா மலா் அளித்து ரோபோ வரவேற்றது வாக்காளா்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் வேளாண்மைத் துறை சாா்பில், பசுமை வாக்குப் பதிவு மையம் ஒன்றும்அமைக்கப்பட்டிருந்தது. அந்த மையத்தில் வாக்களிக்க வந்த வாக்காளா்களுக்கு மரக் கன்றுகள் வழங்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவள்ளூா் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வரவேற்பு

வாக்காளா்களை வரவேற்ற ரோபோ!

வாக்குச்சாவடியில் வாக்காளா்களை இனிப்புடன் வரவேற்ற ‘டினா ரோபோ’

வாக்காளர்களைத் தமிழில் பேசி பூ கொடுத்து வரவேற்ற ரோபோ!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



