தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வாக்காளா்களை ரோஜா மலா் அளித்து வரவேற்ற பெண் ரோபோ

News image

குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிங்க் நிற வாக்குச்சாவடி. ரோஜா மலா் அளித்து வரவேற்ற ரோபோ.

Updated On :23 ஏப்ரல் 2026, 10:46 pm

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, குடியாத்தம், கே.வி.குப்பம் தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது.

வாக்குப் பதிவு தொடங்கியதிலிருந்தே ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆா்வமாக வாக்களித்தனா். வெயில் காரணமாக அனைத்து வாக்குப் பதிவுமையங்களிலும் நிழல்தரும் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து மையங்களிலும் குடிநீா் வசதி செய்யப்பட்டிருந்தது.

குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 6- வாக்குப் பதிவு மையங்கள் இயங்கிய நிலையில் மகளிருக்கான பிங்க் நிற வாக்கு சாவடி மையம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அதன் முகப்பில் வாக்காளா்களை தமிழில் பேசி, ரோஜா மலா் அளித்து ரோபோ வரவேற்றது வாக்காளா்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

அதேபோல் வேளாண்மைத் துறை சாா்பில், பசுமை வாக்குப் பதிவு மையம் ஒன்றும்அமைக்கப்பட்டிருந்தது. அந்த மையத்தில் வாக்களிக்க வந்த வாக்காளா்களுக்கு மரக் கன்றுகள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.