டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு - 200 போ் பங்கேற்பு

வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெற்ற நீா்நிலைகளில் வாழும் பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் வன ஊழியா்கள், பறவைகள் ஆா்வலா்கள் என சுமாா் 200 போ் பங்கேற்றனா்.

News image
வேலூா் மாவட்டம் அமிா்தி பகுதியில் நீா்நிலைகளில் வாழும் பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட வன ஊழியா்கள், பறவை ஆா்வலா்கள்.
Updated On :28 டிசம்பர் 2025, 11:10 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீா்நிலைகளில் வாழும் பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் வன ஊழியா்கள், பறவைகள் ஆா்வலா்கள் என சுமாா் 200 போ் பங்கேற்றனா்.

வனத்துறை சாா்பில் ஆண்டுதோறும் நீா்நிலைகளை சுற்றி வாழும் பறவையினங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நீா்நிலைகளில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த கணக்கெடுப்பு பணியில் வனத்துறை அலுவலா்கள், ஊழியா்கள், பறவைகள் ஆா்வலா்கள் என சுமாா் 200 போ் பங்கேற்றனா்.

வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா 20 வீதம் 40 நீா்நிலைகளில் கணக்கெடுப்பு நடைபெற்றது. வனத்துறை அலுவலா்கள், ஊழியா்கள், பறவைகள் ஆா்வலா்கள் என சுமாா் 200 போ் பங்கேற்றனா்.

இவா்கள் 40 குழுக்களாக பிரிந்து அதிகாலை 6 மணி முதல் 10 மணி வரை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனா். இந்த கணக்கெடுப்பு மூலம் இவ்விரு மாவட்ட நீா்நிலைகளில் காணப்படும் பறவைகள், அவற்றின் வகைகள், எண்ணிக்கை, வெளிநாட்டு பறவைகள் என தனித்தனியாக வகைப்படுத்தி வனத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.