கொடைக்கானல் வனப் பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி


கொடைக்கானல் வனப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வனத் துறையினா், கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்கள் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனா்.
கொடைக்கானல் வனக் கோட்டத்தில் உள்ள கொடைக்கானல், பூம்பாறை, பேரிஜம், வந்தரேவு, பெரும்பள்ளம், மன்னவனூா், வடகவுஞ்சி ஆகிய 7 வனச் சரகங்களில் வனப் பணியாளா்கள், பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவா்கள் ஒருங்கிணைந்த நிலப் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது கொடைக்கானல் வனப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டதாகவும், 27 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்திருப்பதாகவும் கொடைக்கானல் ரேஞ்சா் பழனிக்குமாா் தெரிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...