ஆலங்குளம்,ஏப்.26:÷மத்திய அரசின் பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களும்,தனியார் காப்பீட்டு நிறுவனங்கள்,வாகனக் காப்பீட்டு பிரீமியத்தை உயர்த்தியுள்ளதால்,வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
÷மேலும் காப்பீடு பிரீமியம் உயர்வால்,வாகன உரிமையாளர்கள் வாடகைக் கட்டணத்தை உயர்த்த எண்ணி யுள்ளனர்.
÷யுனைடெட்இந்தியா, நியூஇந்தியா, ஓரியண்டல், நேசனல் உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களும்,பல்வேறு தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், வாகனக்காப்பீடு, விபத்துக்காப்பீடு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பொதுக்காப்பீடு சேவைகளை வழங்கி வருகின்றன.
÷வாகனக் காப்பீட்டில்,பேக்கேஜ் பாலிசி,லைபிலிட்டி பாலிசி என இரு வகை உள்ளது.
÷இதில் வாகனங்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டில்,ஆக்ட்பாலிசி(அ) லைபிலிட்டிபாலிசி என குறிப்பிடப்படும் பாலிசிகளுக்கான பிரீமியத்தை அதிகரித்துள்ளதாக,காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம்(ஐஆர்டிஏ) அறிவித்தது.
÷இதையடுத்து,அரசு பொதுத் துறை பொதுகாப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பிரீமியம் உயர்வை ஏப்.25 முதல் அமல்படுத்தியுள்ளன. ÷இதில் இருசக்கர வாகனங்கள் முதல் இலகுரக வாகனங்கள்,கனரக வாகனங்கள் என அனைத்து வகையான வாகனங்களுக்கும் பிரீமியம் உயர்த்தப் பட்டுள்ளது.
÷ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட பிரீமியத்தில் இருந்து, குறைந்தது 10 சதவிகிதத்தில் இருந்து அதிகபட்சமாக 75 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
÷குறிப்பாக இருசக்கர வாகனங்கள், சொந்த உபயோக வாகனங்களைக் காட்டிலும்,வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், சரக்கு வாகனங்களுக்கு கடுமையாக பிரீமியம் உயர்த்தப்பட்டுள்ளது.
÷இதனால் அத்தகைய வாகனங்களை இயக்குவோர், வாடகை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளனர்.
÷இதன் மூலம் சுற்றுலா வாகனங்கள்,ஆட்டோக்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது வரும்.
÷அதோடு சரக்கு வாகனங்களும் வாடகைக் கட்டணத்தை உயர்த்தும்போது, அதனைப் பயன்படுத்தும் வியாபாரிகள்,அதில் உண்டாகும் கூடுதல் செலவை ஈடுகட்ட,அத்தியாவசிய பொருள்கள் மீது விலை உயர்வு ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியாது.
÷எனவே,காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏ), புதிதாக உயர்த்தப்பட்டுள்ள,வாகனக் காப்பீட்டு பிரீமியம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கின்றனர் வாகன உரிமையாளர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குடும்ப ஆட்சிக்கு முடிவு; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! - எடப்பாடி பழனிசாமி
பிரசாரத்தை நிறைவு செய்தார் இபிஎஸ்!
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
சென்னையில் விஜய் சாலைவலம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

