தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சென்னையில் விஜய் சாலைவலம்!

சென்னையில் தவெக தலைவர் விஜய் சாலைவலம் பற்றி...

News image

தவெக தலைவர் விஜய் - YT | TVK

Updated On :21 ஏப்ரல் 2026, 8:24 am

சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செவ்வாய்க்கிழமை சாலைவலம் மேற்கொண்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதிக் கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலை, பொன்னேரி, கொளத்தூர், வில்லிவாக்கம் பகுதிகளில் திங்கள்கிழமை சாலைவலம் மேற்கொண்டு விஜய் வாக்குச் சேகரித்தார்.

இந்த நிலையில், இன்று மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று மாலை 3 மணியளவில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசவுள்ளார்.

இதற்காக மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து நந்தனம் வரை பிரசார வாகனத்தில் நின்றபடி சாலைவலமாக விஜய் சென்றுகொண்டுள்ளார்.

முன்னதாக இன்று காலை மக்களுக்காக விஜய் வெளியிட்ட கடிதத்தில், லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

Summary

TVK Leader Vijay roadshow in Chennai!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.