ஆரணி மார்க்கெட் சாலை, காந்தி ரோடு, சத்தியமூர்த்தி சாலை பகுதிகளில் ரூ.3 கோடி மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பழைய பஸ்நிலையம் தாற்காலிகமாக கோட்டை மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஒரிரு மாதங்களில் பணிகள் முடிவடைந்து, மீண்டும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பழைய பஸ்நிலையத்தை ரூ. 1 கோடியில் மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. சனிக்கிழமை திருவண்ணாமலைக்கு வரும் துணை முதல்வர் ஸ்டாலின் இப்பணிக்கான அடிக்கல் நாட்டுகிறார். இதனால் மேலும் 6 மாதங்கள் கோட்டை மைதானத்திலேயே பஸ் நிலையம் செயல்படும் எனத் தெரிகிறது.